கர்மவீரர்
முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் உப்புக் காய்ச்ச வேதாரண்யம் நடந்தவர் நேருவுக்குப் பின் யாரெனக்கூற ஓடியவர் எப்போதும் நேர்மையின் பக்கம் நின்றவர்! கருப்பு நிறத்தவர் வெள்ளை உள்ளத்தவர் சிவப்புச் சிந்தனையாளர
முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர்
உப்புக் காய்ச்ச வேதாரண்யம் நடந்தவர்
நேருவுக்குப் பின் யாரெனக்கூற ஓடியவர்
Advertisement
எப்போதும் நேர்மையின் பக்கம் நின்றவர்!
கருப்பு நிறத்தவர்
வெள்ளை உள்ளத்தவர்
சிவப்புச் சிந்தனையாளர்
பச்சைத் தமிழர்!
படிக்கட்டும் குழந்தைகள் -அதுதான்
படிக்கட்டு முன்னேற என்றார்.
படிக்காதவர்தான் இவர் -ஆனால்
பாருக்கே பாடநூல் ஆனார்!
துண்டு போட்டதுண்டு
தோளில் - நாட்டில் அன்று
தூக்கி எறிந்ததுண்டு
பதவியை - பண்பை யன்று
இறப்பதற்கென்றே சிலர் பிறப்பார்
மறப்பதற்கென்றே சிலர் பிறப்பார்
மறப்பதற்கும் நாம் மறந்துவிட்ட
மாமனிதர் இவர்தான் காமராசர்.