குறள் பாட்டு
பொறுத்திருந்தால் நன்மையுண்டு காலம் கனிவு தந்திடும்
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 AM
பொறையுடைமை
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
-திருக்குறள்
அடுத்தவர் செய்த கேடுகள்
தொடர்ந்து துன்பங்கள் தந்தாலும்
அடுக்கடுக்காய் மீண்டும் அவர்
எத்தனை துன்பங்கள் செய்தாலும்
பொறுத்திருந்தால் நன்மையுண்டு
காலம் கனிவு தந்திடும்
மறந்துவிட்டால் நன்மையுண்டு
மன அழுத்தம் மாறிவிடும்.