வீண்!
இராமகிருஷ்ணரைப் பார்த்து ஒருவர் கேட்டார் - ""தண்ணீர் மீது உங்களால் நடக்க முடியுமா?'' ""முடியாது!'' என்றார் இராமகிருஷ்ணர். ""நீங்கள் என்ன பெரிய ஞானி? நான் நடக்கிறேன் பாருங்கள்...'' என்று கூறிவிட்டு அவ்
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:49 PM
இராமகிருஷ்ணரைப் பார்த்து ஒருவர் கேட்டார் -
""தண்ணீர் மீது உங்களால் நடக்க முடியுமா?''
""முடியாது!'' என்றார் இராமகிருஷ்ணர்.
Advertisement
""நீங்கள் என்ன பெரிய ஞானி? நான் நடக்கிறேன் பாருங்கள்...'' என்று கூறிவிட்டு அவ்வாறே நடந்தும் காட்டினார்.
""எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?''
""பதினெட்டு ஆண்டுகள் முயற்சி செய்து கற்றுக் கொண்டேன்'' என்றார் அந்த மனிதர்.
இராமகிருஷ்ணர் அமைதியாகச் சொன்னார் -
""கொஞ்சம் காசு கொடுத்தால் அந்தக் கரைக்குப் படகில் போய்
விடலாமே! இதற்குப் போய் பதினெட்டு ஆண்டுகளை வீணாக்கி விட்டீர்களே..?''