குறள் பாட்டு
தவத்தைக் கடைப்பிடிப்பவர் தவத்தின் கோலம் கொள்ளலாம்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:37 PM
தவம்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலால் மேற்கொள் வது.
-திருக்குறள்
தவத்தைக் கடைப்பிடிப்பவர்
தவத்தின் கோலம் கொள்ளலாம்
நல்ல எண்ணம் உள்ளவரே
தவத்தின் வழி வாழலாம்
நல்ல சிந்தனை இல்லாமல்
தவத்தின் வேடம் தாங்குவது
இழிவு செய்யும் செயலன்றோ
பெருமையற்ற செயலன்றோ.