குறள் பாட்டு
எப்பொழுது விரும்பிடும் சுற்றமிருந்தால் நன்மையே
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:30 PM
சுற்றம் தழால்
(பொருட்பால் - அதிகாரம் 53, பாடல் 2)
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்.
-திருக்குறள்
பணமிருக்கும் நேரத்தில்
பலரும் சூழ்ந்தி ருப்பார்கள்
எப்பொழுது விரும்பிடும்
சுற்றமிருந்தால் நன்மையே
விருப்பம் குறைந்து போகாத
சுற்றமி ருந்தால் ஒருவர்க்கு
வளர்ச்சி குன்றா நன்மைகள்
வந்து சேர்ந்து நிறைந்திடும்!