உதவி செய்வாயே!
கா...கா... என்றே கறைகிறதே காலைப் பொழுதை உரைக்கிறதே
கா...கா... என்றே கறைகிறதே
காலைப் பொழுதை உரைக்கிறதே
காக்கை அப்படிச் செய்திடவே
கட்டளை எவரும் இடவில்லையே!
கொக்கரக் கோ...வென சேவலுமே
கூவி நேரம் உரைக்கிறதே
மக்களுக் காகச் செய்எனவே
மாந்தர் எவரும் சொல்லலையே!
உழவருக் காக நிலத்தினிலே
உதவி செய்திடும் மண்புழுவை
உழவர் எவரும் மண்கிளறி
உதவிடச் சொல்லி அழைக்கலையே!
தேவை உணர்ந்தே மாந்தருக்குச்
சேவை செய்திடும் அவைபோல
தேவை யறிந்தே பிறர்க்குதவி
செய்தே நீயும் மகிழ்வாயே!