குறள் பாட்டு
கற்றவர்கள் முன்னிலையில் கற்றவர் ஏற்கும் வகையிலே
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:35 PM
அவை அஞ்சாமை
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்
-திருக்குறள்
கற்றவர்கள் முன்னிலையில்
கற்றவர் ஏற்கும் வகையிலே
கற்றதை எடுத்துச் சொல்வது
தனித் திறமை ஆகுமே
கற்றவர்கள் குறை கூறும்
அளவில் ஏதும் பேசாமல்
நல்ல தையே பேசினால்
கற்ற கல்வி சிறந்ததே!