குறள் பாட்டு
சேமிக்கும் முயற்சி இல்லாமல் இல்லையென்று சொல்பவரை
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:02 PM
பொருள் செயல் வகை
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.
-திருக்குறள்
சேமிக்கும் முயற்சி இல்லாமல்
இல்லையென்று சொல்பவரை
எல்லாரும் இகழ்ந்து பேசுவர்
இதுதான் உலகின் மனநிலை
இல்லையென்று சொல்லாமல்
சேமித்துப் பெருக்கி வளத்துடன்
வாழுகின்ற செல்வரை
வாழ்த்திச் சிறப்புச் செய்வார்கள்.