குறள் பாட்டு
எந்தத் துன்பம் வந்தாலும் அறிவால் அதனை மாற்றலாம்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:09 PM
இடுக்கண் அழியாமை
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
-திருக்குறள்
புயலில் பெய்த மழைவெள்ளம்
பெருவெள்ளமாய் ஓடிடும்
பெருவெள்ளம் போல் துன்பங்கள்
படையெடுத்து வந்திடலாம்
எந்தத் துன்பம் வந்தாலும்
அறிவால் அதனை மாற்றலாம்
அறிவுடையோர் யாருமே
அதன் இயல்பை அறிவரே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்