குறள் பாட்டு
முதலில் செய்யும் நிலையுள்ளமுக்கியமான செயலினை
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:17 AM
வினைசெயல்வகை
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
-திருக்குறள்
முதலில் செய்யும் நிலையுள்ள
முக்கியமான செயலினை
காலம் கடந்து போகாமல்
கருத்தாய்ச் செய்ய வேண்டுமே!
பிறகு செய்தாலும் பிழையில்லை
என்று கருதும் செயலினைத்
தாமதமாய்ச் செய்யலாம்.
தரம் பிரித்துச் செயல்படு.