குறள் பாட்டு
நல்லது கெட்டது அறிந்தவர்நல்லதை மட்டும் செய்பவர்
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:57 AM
கயமை
நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
-திருக்குறள்
நல்லது கெட்டது அறிந்தவர்
நல்லதை மட்டும் செய்பவர்
அறத்தை நெஞ்சில் நிறைத்தவர்
அவர்க்கும் கவலை இருக்கலாம்.
அறத்தைப் பற்றி அறியாத
அநீதியான கயவர்கள்
கவலையின்றி வாழ்வார்கள்
அவர்கள் பேறு பெற்றவரா?