குறள் பாட்டு
அறிவின் கூர்மை சிதைந்திட்டால்சேமித்த பொருள் போய்விடும்
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:46 AM
ஊழ்
பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை
-திருக்குறள்
அறிவின் கூர்மை சிதைந்திட்டால்
சேமித்த பொருள் போய்விடும்
அறிவை இழக்கும் நிலையில் ஊழ்
தலை விரித்து ஆடிடும்
பொருளைச் சேர்க்கும் ஊழிருந்தால்
இருளில்லாத தெளிவுடன்
அறிவு திறனாய்ச் செயல்படும்
அதன் வழி பொருள் சேர்ந்திடும்.