சிறுவர்மணி

கதைப்பாடல்: மனபேதம் - மதபேதம்!

இந்த மதம்நான் அந்த மதம்நீ  என்பது எல்லாம் வீண் பேச்சு!

மு.கலிய பெருமாள்

இந்த மதம்நான் அந்த மதம்நீ

  என்பது எல்லாம் வீண் பேச்சு!

எந்த மதம்நீ என்றிருந் தாலும்

  இறைவன் வழியில் வாழ்ந் திடுவாய்!

இறைவன் வழியில் வாழ்வது என்றால்

  எங்கோ இல்லை அவ் வாழ்வு

இறைவன் உனக்குள் இருப்பத னால்நீ

  எண்ணிடும் வாழ்வே உன் வாழ்வாம்!

எண்ணம் நலமாய் இருந்தால் வாழ்வு

 இனிதாய் அமையும்; அது அன்றி

எண்ணக் கெடுதல் இருந்தால் வாழ்வில்

 என்றும் அல்லல் தான் அறிவாய்!

எனவே தூய எண்ணம் கொண்டால்

 இனிதாய் அமையும் உன் வாழ்வு!

இனிதாய் வாழ்வு இருந்தே விட்டால்

  எந்த மதம்நீ என்பது வீண்!

மதத்தில் பேதம் என்பது எல்லாம்

 மனத்தின் பேதம் தான்; எனவே

மனத்தில் தூய எண்ணம் கொண்டே

 மேலாம் வாழ்வைப் பெறுவாயே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT