உயிர்வாழ!
காமராஜர் குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டினார்.
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:11 AM
காமராஜர் குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டினார்.
இத்திட்டத்தை எதிர்த்த எஸ்டேட் முதலாளிகள், ""அணை கட்டப்படுமானால் ஆயிரக்கணக்கான ரப்பர் எஸ்டேட் அழிந்துவிடும். எனவே திட்டத்தைக் கைவிடவேண்டும்''என்று கேட்டுக் கொண்டனர்.
""மக்கள் அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று உயிர்வாழ முடியுமானால் கூறுங்கள். அணை கட்டும் திட்டத்தைக் கை விட்டு விடுகிறேன்'' என்றார் காமராஜர்.
Advertisement
அப்புறம் என்ன? சிற்றாறு அணைத்திட்டம் சிறப்பாக நிறைவேறியது.