முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: பிரசாரம் நிறைவு

மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரசாரம் நிறைவு பெற்றது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 6:30 PM
மேற்கு வங்க மாநில முதல்வா் மமதா பானா்ஜி - File photo
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 6:30 PM

மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேற்குவங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறவிருப்பதால், அந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

Advertisement

மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் ஏப். 23ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.