முகப்பு
சிறுவர்மணி

அத்தை!

மூங்கில் அடர்ந்திருந்த அத்தையின் தோட்ட வீட்டிற்குச் சென்றான் வேலு.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

மூங்கில் அடர்ந்திருந்த அத்தையின் தோட்ட வீட்டிற்குச் சென்றான் வேலு.

""அத்தை! அத்தை!'' என்று கூப்பிட்டான்.

""என்ன வேண்டும்?'' என்று கேட்டாள் அத்தை.

""ஒரு கூடை வேண்டும்''

""இப்போது என்னிடம் இல்லையே''

""நாளை காலை தோட்டத்தில் பழங்கள் பறித்து வரலாம் என்றிருக்கிறேன். சரி, பரவாயில்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்''

""உள்ள போய் எடுத்துக் குடியேன்.''

""சரி'' என்று கூறிவிட்டு உள்ளே சென்று தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்புகிறான்.

""நீ நாளை வா. கூடை தயாராக இருக்கும்''என்றாள் அத்தை.

வேலுவிற்கு ஆச்சரியமாய் இருந்தது. "எப்படி இவளால் முடியும்? உள்ளே நிச்சயமாய்க் கூடை இல்லை. சரி, நாளை வந்துதான் பார்ப்போமே... இல்லையென்றால் கடைத்தெருவிற்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.' என்று எண்ணியவாறே சென்றான்.

மறுநாள்...

அத்தை நான்கு கூடைகள் பின்னிக்கொண்டிருந்தாள்.

அருகிலுள்ள மூங்கில்புதர்களில் இரண்டு மூங்கில்கள் வெட்டப்பட்டிருந்தன.

வேலுவிற்குப் புரிந்து விட்டது! மூங்கில்களை வெட்டி பத்தைபோட்டுப் பின்னியிருக்கிறாள்.

தோட்டத்திலிருந்து வரும்போது அத்தைக்கு நிறைய பழங்கள் கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அத்தையின் உழைப்பை மனத்திற்குள் நினைத்து அன்பும் மரியாதையும் கொண்டான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.