கதைப்பாடல்: அழகா? ஆற்றலா?
தோகை அழகை வியந்து சொல்லி தானே பெருமை பட்டது - என்
தோகை அழகை வியந்து சொல்லி
தானே பெருமை பட்டது - என்
தோகை போல வேறெங்குமில்லை
என்று செருக்கு கொண்டது!
பறந்து போன கொக்கை அதட்டி
பக்கம் வரவே சொன்னது - உன்னில்
சிறந்த இறகு எனக்குத் தானே
என்று சொல்லி மகிழ்ந்தது!
வண்ண வண்ண வானவில் போல
வடிவில் கூட இருந்தது - என்
எண்ணம் போல எல்லா வண்ணம்
எந்தத் தோகை கொண்டது!
என்னை விடவும் அழகு இல்லை
என்றே புகழ்ச்சி கொண்டது - அது
தன்னை அதிகப் படியாய் எண்ணிக்
கொண்டு ஆட்டம் போட்டது!
கொக்கே உனக்கு வண்ணம் ஒன்றே!
அழுக்காய் கூட கிடக்கிறாய்! - என்று
கொக்கை கோபப் படுத்தி மயிலும்
மகிழ்ந்து இருப்பதைப் பார்க்கிறாய்!
அழகிய மயிலே அனைத்தும் உண்மை
ஆனால் என்போல் பறந்திடு - உன்
அழகை கொண்டு தூர மாகப்
பறக்க முடியா உணர்ந்திடு!
பதுங்கிய நரியைக் கண்டு இரண்டும்
பட்டென இறக்கை அடித்தது - நரி
பதுங்கித் தாவி மயிலைக் கவ்வி
தோகை பிரித்து உண்டது!
கொக்கின் வேகம் தக்க படியாய்
இருந்த தாலே விரைந்தது! - அழகில்
சொக்கி இருந்த மயிலோ நரியின்
உணவாய் மாறி மறைந்தது!