முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: அழகா? ஆற்றலா?

தோகை அழகை வியந்து சொல்லி தானே பெருமை பட்டது - என்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:

தோகை அழகை வியந்து சொல்லி

 தானே பெருமை பட்டது - என்

தோகை போல வேறெங்குமில்லை

 என்று செருக்கு கொண்டது!

பறந்து போன கொக்கை அதட்டி

 பக்கம் வரவே சொன்னது - உன்னில்

சிறந்த இறகு எனக்குத் தானே

 என்று சொல்லி  மகிழ்ந்தது!

வண்ண வண்ண வானவில் போல

 வடிவில் கூட  இருந்தது - என்

எண்ணம் போல எல்லா வண்ணம்

 எந்தத் தோகை  கொண்டது!

என்னை விடவும் அழகு இல்லை

 என்றே புகழ்ச்சி கொண்டது - அது

தன்னை அதிகப் படியாய் எண்ணிக்

 கொண்டு ஆட்டம்  போட்டது!

கொக்கே உனக்கு வண்ணம் ஒன்றே!

 அழுக்காய் கூட  கிடக்கிறாய்! - என்று

கொக்கை கோபப் படுத்தி மயிலும்

 மகிழ்ந்து இருப்பதைப் பார்க்கிறாய்!

அழகிய மயிலே அனைத்தும் உண்மை

 ஆனால் என்போல் பறந்திடு - உன்

அழகை கொண்டு தூர மாகப்

 பறக்க முடியா  உணர்ந்திடு!

பதுங்கிய நரியைக் கண்டு இரண்டும்

 பட்டென இறக்கை  அடித்தது - நரி

பதுங்கித் தாவி மயிலைக் கவ்வி

 தோகை பிரித்து உண்டது!

கொக்கின் வேகம் தக்க படியாய்

  இருந்த தாலே  விரைந்தது! - அழகில்

சொக்கி இருந்த மயிலோ நரியின்

 உணவாய் மாறி மறைந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.