கதைப்பாடல்: ஓவியர் ரவிவர்மா!
ஓவியர் என்றால் ரவிவர்மா! -நம் உள்ளத்தில் அவரே புவி பிரம்மா!
ஓவியர் என்றால் ரவிவர்மா! -நம்
உள்ளத்தில் அவரே புவி பிரம்மா!
தேவியை வரைந்தார்! அருள் தருதே!-பல
தெய்வங்கள் அவரால் உயிர்பெறுதே!
பாரதக் கதைகளை வரைந்தாரே!-அதை
பாரோர் புகழ உயர்ந்தாரே!
ஊரை மயக்கிடும் ஓவியம்தான்!-அவர்
உலகுக்குத் தந்தது காவியம்தான்!
இந்திய ஓவியம் வரைந்தாரே!-நம்
இதயத்தில் வண்ணத்தைக் குழைத்தாரே!
அந்நிய நாடும் போற்றுது பார்!-அவர்
அழகிய சித்திரம் பேசுது பார்!
சிறுவரும் அறிவர் அவர் பெயரை!-அவர்
சித்திரம் போக்குது நம் துயரை!
திறமையால் உயர்ந்தார் ரவிவர்மா!-அவர்
சித்திரங்கள் போலே இனி வருமா!