நரைக்கத்தானே செய்யும்!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி மேடைப் பேச்சில் வல்லவர். ஒருமுறை சபையோர் மெய்மறந்து அவரது சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி மேடைப் பேச்சில் வல்லவர். ஒருமுறை சபையோர் மெய்மறந்து அவரது சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவருக்குப் பின் பேச எழுந்த சௌந்தரா கைலாசம், ""ம.பொ.சியின் மீசை ஏன் நரைத்திருக்கிறது என்று இன்றைக்குத்தான் எனக்குப் புரிந்தது. இப்படித் தேனொழுகப் பேசினால் அந்தத் தேன்பட்டு மீசை நரைக்கத்தானே செய்யும்'' என்று கூறித் தன் பேச்சை ஆரம்பித்தார்.