கதைப்பாடல்: கடல்
நான்கு பக்கம் கடல்கள் சூழ்ந்த நாட்டைத் தீவென் பார்கள்.
நான்கு பக்கம் கடல்கள் சூழ்ந்த
நாட்டைத் தீவென் பார்கள்.
மூன்று பக்கம் சூழ்ந்த நாட்டின்
Advertisement
பெயரோ தீப கற்பம்.
முத்து, பவளம் ஆழத் திலே
மூழ்க மூழ்கக் கிடைக்கும்.
சொத்து மிக்க சுரங்க மாக
கத்தும் கடல்கள் அமையும்.
பாய்ச்சு வார்கள் நீரைக் கரையில்
பாத்தி கட்டி வைத்து
காய்ச்சு வார்கள் அதிலே உப்பு
கடலும் உணவுக் குதவும்.
மின்னு கின்ற மீன்கள், மீனைத்
தின்னும் திமிங்க லங்கள்
இன்னும் நிறைய ஜீவ ராசி
இருக்கும் உலகம் கடலே.
திரவியங்கள் தேட வேண்டி
திரைகடலில் சென்றால்
கரையின் திசையை அறிய வேண்டி
சுழலும் விளக்கு எரியும்.
நன்கு திரியும் கரையின் ஓரம்
மணலில் வீடு கட்டி
கண்டு மகிழும் சிறுவர் போல
துள்ளிக் குதிக்கும் அலைகள்.
கடலின் மீதும் பாலம் கட்டி
காரில் பயணம் போவோம்.
கடலும் வானும் நீல வண்ணம்
காணக் காண அழகு.