முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

விலை உயர்ந்தது என்பதற்காக, தேவை இல்லாத பொருளை வாங்காதே.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

விலை உயர்ந்தது என்பதற்காக, தேவை இல்லாத பொருளை வாங்காதே. -ஆஸ்கார் ஒயில்ட்

ஆணாயினும் பெண்ணாயினும் ஒவ்வொருவருடைய தொழிலும் பிறருக்குச் சேவை செய்வதே. -டால்ஸ்டாய்

தவறு என்று எதையும் உணராமல் இருப்பதே தவறுகளில் தலையாயது ஆகும். -கார்லைல்

தன்னம்பிக்கையே வெற்றியின் அடிப்படை இரகசியம் ஆகும். -எமர்சன்

அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிக்கிறார்கள். -லின்யுடவ்

முதியவர் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரத்தினம் இருக்கிறது. -சீனப் பழமொழி

அன்பு என்பது சமுதாயத்தை இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலி. -கோயத்தே

வாழ்க்கையின் இனிப்பு, வியர்வைத் துளியின் உப்பிலிருந்தே கிடைக்கிறது. -டேவிட்

எந்த இல்லத்தில் நூலகம் உள்ளதோ அந்த இல்லத்தில் ஆன்மா இருக்கிறது. -பிளாட்டோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.