முத்துக் கதை: மனிதம் என்பது இதுதான்..!
அவனுக்கு சின்னஞ்சிறு வயது. அதாவது அடுத்தவர்கள் கையைப் பிடித்து நடக்கிற குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவனது தந்தை இறந்து விடுகிறார்.
சிறுவர்மணிமுத்துக் கதை: மனிதம் என்பது இதுதான்..!
அவனுக்கு சின்னஞ்சிறு வயது. அதாவது அடுத்தவர்கள் கையைப் பிடித்து நடக்கிற குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவனது தந்தை இறந்து விடுகிறார்.
அவனுக்கு சின்னஞ்சிறு வயது. அதாவது அடுத்தவர்கள் கையைப் பிடித்து நடக்கிற குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவனது தந்தை இறந்து விடுகிறார். என்ன நடந்திருக்கிறது...? இனி என்ன நடக்கப் போகிறது...? என்று அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை. உற்றார், ஊரார், உறவினர் ஆகியோர் அவனைப் பரிவோடு பார்த்துப் பரிதாபப்பட்டார்கள்.
இறந்து போன அப்பாவின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். பாதிரியார் வந்தார். இறந்தவரின் பெருமைகளைப் பற்றி சொன்னார். பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டினார்.
பிரார்த்தனை செய்தார். பரமபிதாவிடம் உருகினார். அடக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் கண்களை மூடி கசிந்துருகி பிரார்த்தனையில் மூழ்கினர்.
அந்த இளந்தளிர், சவப்பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஈரமான அந்தக் குழிக்குள் இருக்கிற சவப்பெட்டியின் மீது தவளை ஒன்று உட்கார்ந்திருந்தது. எப்படி எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.
ஜெபம் முடிந்தது. பாதிரியார் ஒரு பிடி மண்ணை எடுத்துக் குழியில் போட்டார். மற்றவர்களும் குழியில் தள்ளினர்.
அப்போது அந்தக் குழந்தை பதறினான். ""பார்த்து... பார்த்து அந்த தவளை செத்துவிடப் போகிறது...'' என்று மழலை மொழியில் அலறினான். சவப்பெட்டி மீது இருந்த தவளை செத்துவிடக் கூடாதென பதறிய பாலகன் யார் தெரியுமா...?
அவன்தான் ரஷிய நாவலாசிரியர் மாக்சிம் கார்க்கி. அவனது பதற்றத்திற்கு பெயர்தான் மனிதம்.