இயேசுநாதரின் பொன்மொழிகள்!
தைரியமுள்ளவனால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும்.
தைரியமுள்ளவனால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும்.
ஒழுக்கமுள்ளவர்கள் உலகிற்கு ஒளியாவார்கள்.
கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை.
Advertisement
சத்தியம் என்பது மனவலிமை. சாந்தம் என்பது மன அடக்கம்.
சிறு விஷயத்தில் தவறாக நடப்பவன் பெரிய விஷயத்திலும் தவறாகவே நடப்பான்.
சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
தலைவனாக இருக்க விரும்புகிறவனுக்கு ஊழியனாகவும் இருக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அமைதிக்காக உழைத்து அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.
அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
நிறைகளைப் போற்று குறைகளைக் கண்டால் ஒன்றும் சொல்லாதே.