முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. 
- அரிஸ்டாட்டில்

சிந்திக்காமல் படிப்பது வீண். படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது. 
-கன்ஃபூஷியஸ்

வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவை அறிந்து வரவைச் சேர்ப்பது நற்குணம். 
- கவிதாசன்

நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும்போதே காண்கிற கனவு.
- பிளினி 

மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்திற்குப் போ! 
- மாசேதுங்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச் செய்து பார்த்ததில்லை என்று பொருள்! 
- ஐன்ஸ்டின்

நேற்று அசாத்தியமாய் இருந்தது இன்று சாத்தியமாகும் அற்புதத்தை, ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். 
- விவேகானந்தர்

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல!....., அது வேலையைவிட அதிகக் களைப்பைத் தரும்! 
- புல்லர்

நான் இன்னும் வாசிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். 
- ஆபிரஹாம் லிங்கன் 

முழு கட்டுரையைப் படிக்க →