சிறுவர்மணி

முத்துக் கதை: அம்மா!

மகனே!...திடீரென்று எனக்கு கண் பார்வை போய்விட்டால் என்ன செய்வாய்? சொல் பார்க்கலாம்'' என்றாள். 

DIN

அம்மா மகனுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தாள். அவள் மகனிடம், "மகனே!...திடீரென்று எனக்கு கண் பார்வை போய்விட்டால் என்ன செய்வாய்? சொல் பார்க்கலாம்'' என்றாள். 
 "ஏம்மா அப்படிச் சொல்றே?....உனக்கு அந்த மாதிரியெல்லாம் ஆகாது...''
"ஒருவேளை கண் பார்வை மங்கிவிட்டால்?''
"நல்ல ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பேன் அம்மா!''
"அங்கே எனக்கு கண் பார்வை சரியாக மீட்க முடியாவிட்டால்?''
"உலகத்திலேயே நல்ல கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காண்பிப்பேன்''
"சரி..., சரி..., அந்த சிகிச்சையும் பலனளிக்காவிட்டால்?
" நான் உங்களை கண்ணும் கருத்துமாய் கவனித்து காப்பாற்றுவேன் அம்மா!''
"சரிம்மா....,இதெல்லாம் என்கிட்டே கேக்கிறியே.....,எனக்கு கண் பார்வை இல்லாமல் போனா நீ என்ன செய்வேம்மா?...''
"என் கண்களை உடனே உனக்குத் தருவேன் மகனே!''
-எம். பார்த்தசாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT