பொன்மொழிகள்!
அவசரமாகத் தவறு செய்வதை விட, தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
அவசரமாகத் தவறு செய்வதை விட, தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
- ஜெபர்சன்
எவனால் சிரிக்க முடிகிறதோ, அவன் யாராயிருந்தாலும் பணக்காரனே!
- ஹிட்ச்காக்
உனக்கு நன்றாகத் தெரிந்த விஷயத்தை அது பற்றி அரைகுறையாகத் தெரிந்தவன் சொல்லுகின்றபோது கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றி பெறுவாய்!
- நிகோலஸ் செம்ஸ்ஃபோர்ட்
மறக்க வேண்டியதை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம்!
- யாரோ
கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை!
- ேக்ஷத்ரக்ஞர்
உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
- கார்ல் மார்க்ஸ்.
முன் நோக்கிச் செல்லும்போது கனிவாய் இரு! ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
- யாரோ
சிக்கனம் என்பது குறைவாகச் செலவு செய்வதல்ல...உபயோகமாகச் செலவு செய்வதுதான்!
- டால்ஸ்டாய்
மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. அந்த நிலையில்தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
- யாரோ