சிறுவர்மணி

பொய்மையும்...

DIN

கதைப் பாடல்

அப்பா அலுவலகம் செல்ல
ஆயத்த மானார் காலையிலே

எப்போதும்அவர் பணியினிலும்
எதிலும் உறுதி யாயிருப்பார்

உயர்ந்த பதவி அவர்பணிதான்
ஊரிலும் நல்ல பெயரெடுத்தார்
பயமென் பதுவே அவர்க்கில்லை
பணியிலே முதன்மை அவரெல்லை

அதிகாரி ஆனதால் உடையினிலே
அக்கறை காட்டும் இயல்புடையார்
மதிப்புடை உடையில் தயாரானால்
மாலை வரைக்கும் அழகுதரும்

ஐந்து படிக்கும் அவர்மகனும்
அப்பா என்றே ஓடிவந்தான்
பாய்ந்தே தேனீர் குவளைதனை
பார்க்காது தட்டி விட்டுவிட்டான்

அப்பாவின் உடைகள் தேனீரால்
அசுத்த மானது அவருக்கே
எப்போது மில்லா அளவுக்கே
எரிச்சல் கோபம் வந்ததுவாம்

கம்பை எடுத்தார் மகன்தன்னை
கடிந்தே அடித்திட முயன்றாரே
பயந்த சிறுவன் ஓடிவிட்டான்
பக்கம் அத்தை வீட்டினிலே

அத்தை யிடமே கூறிவிட்டு
அங்கே ஒளிந்து கொண்டானே
உத்தம நடத்தை அவர் வீட்டில்
உண்மை மட்டுமே பேசிடுவார்

அப்பா கம்புடன் ஓடிவந்தார்
அக்கா என் மகன் வந்தானா
இப்போ கிடைத்தால் நொருக்கிடுவேன்
எங்கே அவன்தான் என்றாராம்

தம்பி உன்மகன் வரவில்லை
தயங்கிப் பொய்யே சொன்னாராம்
நம்பிய அவரும் அலுவலகம்
சென்றார் அன்று வரும்பொழுது

சாக்லேட் பொட்டலம் வாங்கிவந்தே
தந்தார் கோபம் மாறியதே
நன்மை பயந்த அப்பொய்யே
நன்றாய் மெய்போல் ஆனதுவே!

-கொ.மா.கோதண்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT