சொல்லு பாப்பா!
சொல்லு பாப்பா! நீ சொல்லு பாப்பா! - தேசம் சுகம் பெறும் வழிகளை நீ சொல்லு பாப்பா!
சொல்லு பாப்பா! நீ சொல்லு பாப்பா! - தேசம்
சுகம் பெறும் வழிகளை நீ சொல்லு பாப்பா!
உழைப்பில்தான் முன்னேற்றம் உண்டு பாப்பா! - வீணில்
ஊர் சுற்றும் போக்கிரிகள் மண்டு பாப்பா!
பிழைப்பதிலேன் குறுக்கு வழி? தீது பாப்பா! - நம்ம
பெரிவங்க சொன்னதெல்லாம் வேதம் பாப்பா! ----(சொல்லு பாப்பா....)
பள்ளிக்கூடம் நம்மறிவை கூர்மையாக்கும்! - தேடும்
பட்டறிவே நம் வாழ்வைச் சீர்மையாக்கும்!
வெள்ளி, தங்கம் உடலுக்கு அழகு கூட்டும் - மதி
விளக்கேற்று!... அகமெல்லாம் ஒளிரும் பாப்பா! ----(சொல்லு பாப்பா...)
Advertisement
அடுத்தவர் பொருளெதற்கு? ஆசை வேண்டாம் - முயற்சி
செய்ததிலே கிடைத்தது போதும் பாப்பா!
முடிந்தவரை பிறர்க்குதவி பண்ண வேண்டும்!
முதியவர்கள் ஆசிகளைப் பெற்றிட வேண்டும்! -----(சொல்லு பாப்பா)
காற்று, ஒலி, நீர் நிலங்கள் இயற்கையன்னை - தந்த
அருட்கொடை!...கறைபடுத்தும் முயற்சி தீங்காம்! -
ஓடியாடி விளையாடி உடலைக் காப்பாய் -அன்புடன்
ஒற்றுமையாய் வாழ்ந்து உலகை வெல்லு பாப்பா! ----(சொல்லு பாப்பா)