சிறுவர்மணி

பாமாலை - 2 

தினமணி

( இது இரண்டாவது பாமாலை. மதுரையில் வாசுதேவன் என்பவரின் 
சேவை மனப்பான்மை பற்றிய உண்மை செய்தியை அடிப்படியாகக் கொண்டது)
கதைப் பாடல்

தூங்கா நகரம் மதுரையிலே - இரவில் 
தூக்கம் வராமல் பசியாலே
வாடும் முகங்கள் பல உண்டு!
வயிறுகள் காயும் துயருண்டு!

சாலையோரம் நடைபாதை
சந்தின் முனைகள் பலவற்றில் 
கண்ணீர் சிந்திய மனிதர்களைக்
கண்டார் "ஆட்டோ' தொழிலாளி!

வாசு தேவன் எனும் இளைஞர்
வாடிய பயிர்க்கும் வாடுகின்ற
வள்ளலார் வழியைப் போற்றுபவர்!
வந்தார் அவர்கள் துயர் தீர்க்க!

உணவகம், திருமண மண்டபங்கள்
ஒவ்வொன்றாக அவர் செல்வார்!
எஞ்சும் உணவை, காய்கறியை
ஏற்றுக் கொள்வார் நன்றியுடன்!
அவற்றை அன்னையின் துணையுடனே 
பொட்டலம் செய்வார் பலவாக!
"ஆட்டோ' விரையும் பசியாற்ற - அவர்கள் 
முகங்கள் மலரும் மனம் குளிரும்!

எஞ்சும் உணவைக் குப்பையிலே 
எறியா வண்ணம் சேகரித்து
அன்புப் பணியைத் தொடர்கின்றார்! - ஏழை
அவலம் துடைத்து மகிழ்கின்றார்!

இல்லார் துயரம் களைகின்ற
இனியவர் இவர்போல் சிலராலே
நாட்டில் நல்ல மழை பெய்யும்!
நாமும் இவரை வாழ்த்திடுவோம்!
-பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT