சிறுவர் பாடல்!: காக்கையக்கா!
காக்கை யக்கா கரியவள்!கடின அலகு உடையவள்!
காக்கை யக்கா கரியவள்!
கடின அலகு உடையவள்!
ஊக்கத்தாலே மரம்தனில்
கூடி கட்டி வாழ்பவள்!
வெள்ளை முட்டை இடுபவள்
கரிய குஞ்சு பொரிப்பவள்!
ஆ காயத் தோட்டி என்று அவளை
அன்புடனே அழைக்கிறோம்!
எங்கள் அம்மா கூரை மேல்
சோறு வைத்து அழைத்ததும்
அங்கு வந்து சேர்பவள்
ஆசையோடு பார்ப்பவள்!
தனது இனத்தைக் கூட்டியே
தானும் இணைந்து உண்பவள்!
உனக்கும் எனக்கும் ஒற்றுமையின்
பெருமை உரைத்துச் சிரிப்பவள்!
கரிய தனது அலகை விரித்து
கத்தும் சத்தம் கேட்போம்!
கா........கா.......கா.......கா
கா........கா.........கா!