சிறுவர்மணி

கவனம்! கதைப்பாடல் 

சேவு.முத்துக்குமார்


காய்ந்து போன மிளகாய் வற்றல் 
காற்றில் நன்றாய்ப் பறந்தது!
பாய்ந்து அதனை எடுக்கப் போனேன்
பல்லும் தானே உடைந்தது!

மாய்ந்து மாய்ந்து அம்மா இட்ட
மிளகாய் வற்றல் பொறுக்கி 
சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தேன் 
அம்மா நோக்கிச் சறுக்கி

நல்ல பிள்ளை எனக்கு நேர்ந்த 
நிலையைக் கண்டாள் அம்மா!
பல் உடைந்து போகக் கண்டு
பதறி விட்டாள் அம்மா!

நாடிச் சென்றோம் மருத்துவரை
நன்றாய்ப் பார்த்துச் சொன்னார்!
""ஆடிய பல் விழுந்திருக்கு....
அச்சம் வேண்டாம்!'' என்றார்.

அன்பு என்மேல் அதிகம் கொண்ட 
அம்மா துடிக்கக் கண்டேன்!
சின்னச் சின்னச் செயலில்கூட 
கவனம் கொண்டு நடப்பேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT