முகப்பு
சிறுவர்மணி

இயேசுநாதரின் பொன்மொழிகள்!

சாந்தமான மனம் உடலுக்கு ஜீவன். பொறாமையோ எலும்புருக்கி நோய் போன்றது.

Updated On : 21 டிசம்பர், 2019 at 9:28 PM
பகிர்:


சாந்தமான மனம் உடலுக்கு ஜீவன். பொறாமையோ எலும்புருக்கி நோய் போன்றது.

முட்டாளின் புகழுரையைக் கேட்பதைவிட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது நல்லது.

தேகபலம் உள்ளவனைவிட பொறுமையுள்ளவனே பலசாலி.

Advertisement

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.

தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும்! தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

செய்த தவறுகளுக்காக வருந்துபவனுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது! 

நண்பர்களிடம் நேசம் கொண்டிருப்பது நல்லது! பகைவனிடமும் நேசம் கொள்வது அதனினும் நல்லது!

இயலாதவர்களிடமும், ஏழைகளிடமும் கருணை கொண்டு உதவுபவனுக்குக் கடவுள் கடன் படுகிறார்!

நல்ல பெயரை எடுங்கள்! அது செல்வத்தினிலும் மேலானது!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.