முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!: 64 - உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது

தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில்ஒரு குழந்தைத் தொழிலாளி "மல்லேஸ்வர் ராவ்!' சிறு வயதில் கடும் உழைப்பு வறுமையினால்!

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில்
ஒரு குழந்தைத் தொழிலாளி "மல்லேஸ்வர் ராவ்!' 
சிறு வயதில் கடும் உழைப்பு வறுமையினால்!
ஒரு வேளை குடும்பம் உண்ணப் பெரும்பாடு!

ஒரு நாளில் மிகச் சோர்வாய்த் தெருவோரம் 
பசியாலே மிக வாடிப் படுத்திருந்தான்! - அதைப் 
பார்த்திட்ட அன்புள்ள ஒரு மனிதர் - சிறுவனின்
பசியாற்றிப் பரிவுடனே உதவி செய்தார்!

"ஹேமலதா லாவனம்' தான் அவர் பெயராம்! - சிறுவன்
மல்லேஸ்வர் ராவ் மீது அன்புகொண்டார்! 
உணவோடு, உறைவிடமும் அவர் தந்தார்! தன்
பள்ளியிலும் சேர்த்திட்டுக் கல்வி தந்தார்!

எளியோர்க்கு நாம் இனி உதவ வேண்டும் - என்று 
மல்லேஸ்வர் ராவ் மனதில் உறுதி கொண்டான்!
ஒரு சமையல் நிறுவனத்தில் வேலை பெற்றான்! - அங்கு
வீணாகும் உணவுகளால் மனம் நொந்தான்!

"டோண்ட்வேஸ்ட் ஃபுட்' என்று ஓர் அமைப்பினையே
ஏற்படுத்தி ஏழைகளுக்குணவளித்தான்!
திருமணங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகளில் 
வீணாகும் உணவுகளைச் சேகரித்து

வீதியிலே பசித்தோர்க்கு உணவளித்தான்!
பற்பலரும் உதவி செய்ய இப்போது
ஹைதராபாத், தில்லி, ரோத்தக் டேராடூன் - என 
நாடெங்கும் சேவைகள் தொடர்கிறது!

"இண்டியன் யூத் ஐகான்' எனும் விருது
"ராஷ்டிரிய கவுரவ் அவார்டு' பட்டம்!
என்றெல்லாம் கவுரவித்துச் சிறப்பித்து
மல்லேஸ்வர் ராவுக்குப் பாராட்டு!

""வீதியிலே உணவின்றி மிக வாடும்
ஏழைகளின் பசியாறி மலரும் முகம் 
பார்ப்பதுதான் நான் விரும்பும் "நிஜ விருது'...'' 
எனக் கூறும்  மல்லேஸ்வர் ராவ்! வாழ்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.