விவேகானந்தரின் பொன்மொழிகள்
ஒவ்வொரு உயிருமே மிக உயர்ந்த தெய்வத்தின் திருக்கோயில்தான்.
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:39 PM
1. ஒவ்வொரு உயிருமே மிக உயர்ந்த தெய்வத்தின் திருக்கோயில்தான்.
2. தைரியமாக இரு! மனப்பூர்வமாக பணி புரி! பக்தி வழியில் செல்! நீ கடவுளை அடைந்து விடுவாய்!
3. எங்கே தவம் முடிந்து விடுகிறதோ அங்கே சமயம் துவங்குகின்றது.
Advertisement
4. மகத்தான சாதனைகளைப் புரியும் பணி எதுவுமே மெல்ல மெல்லத்தான் நிகழும்.
5. கலை என்பது அழகைப் பிரதிபலிப்பது. ஒவ்வொரு செயலிலுமே கலை இருக்க வேண்டும்.
6. நிர்மாணம் செய்வதுதான் நான் பணிபுரியும் வழி. இடித்துத் தள்ளுவது அல்ல.
7. எல்லாச் சமயங்களிலும் மிக முக்கியமான நல்லொழுக்கம் வைராக்கியமே.
8. வெறி, இரத்தம் சிந்துதல், வன்முறை இவை ஒழியாவிட்டால் எந்த நாடும் முன்னேறாது.
9. உண்மையான நாகரீகம் என்பது மிருகத் தன்மையுடன் வாழும் மனிதனை அவ்வாழ்க்கையிலிருந்து வெளிக்கொண்டு வருவதுதான்!