பொன்மொழிகள்
மனிதன் அவனது எண்ணங்களின் தலைவன்! அவனது குணங்களை அமைக்கும் சிற்பி! அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்! அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா!
மனிதன் அவனது எண்ணங்களின் தலைவன்! அவனது குணங்களை அமைக்கும் சிற்பி! அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்! அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா!
- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.
உண்மையும், வீரமும் எங்கு இருக்கிறதோ, அங்கு அடக்கமும் மிகுந்திருக்கும்!
- வில்லியம் ஹெர்பர்ட்
உறுதியற்ற, குழப்பமான மனிதர்கள் ஒரு காரியத்திற்கும் உதவ மாட்டார்கள்!
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
நல்ல எண்ணத்தோடு இரு!.... அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்!
- வள்ளலார்
இந்த நேரம் உன் கையில் இருக்கிறது! அதை ஞானத்தோடும், அறவழியில் நின்றும் பயன் படுத்திக்கொள்!
- மார்க்கஸ் அரேலியஸ்
யாரையாவது நீங்கள் பழிக்கையில், அவர்களது கெட்ட கர்மங்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்!..... யாராவது ஒருவரைப் பாராட்டுகையில் அவர்களின் நல்ல கர்மங்களை உங்கள் வயப்படுத்திக் கொள்கிறீர்கள்!
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
பேச்சைவிட மெளனமே சிறந்தது! பேசித்தான் தீர வேண்டுமென்றால், அந்தப் பேச்சு, உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்!
- வியாசர்
நம்பிக்கை மிக உறுதியாய் இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை!
- மார்ட்டின் லூதர் கிங்
இருளை இருள் அகற்றாது! ஒளிதான் அகற்றும்! வெறுப்பை வெறுப்பு அகற்றாது! அங்கே அன்பு அவசியம் தேவை!
- மார்ட்டின் லூதர் கிங்
அறிவுள்ளவன் துன்ப காலம் வரும்போது முந்தியே தெரிந்துகொண்டு மனத்தை திடப்படுத்திக் கொள்வான்! ஆபத்து வரும்போது கலங்க மாட்டான்!
- வியாசர்