உழவுத் தொழிலே உயிராகும்
உழுதால் நன்றாய்ப் பயிராகும்!
உண்ணும் உணவு எல்லாமே
உழவுத் தொழிலால் வந்ததுவே!
காயும் கனியும் நமக்காக
கழனி எல்லாம் விளைந்ததுவே!
உழவர் நமக்குக் கொடுப்பதெல்லாம்
உயிரைக் காக்கும் வித்தாகும்!
விளையும் பயிர்கள் அத்தனையும்
விவசாயத்தின் முத்தாகும்!
பயிர்த் தொழிலும், உழவர்களும்
பசியைப் போக்கும் சொத்தாகும்!