முகப்பு
சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், இந்த ஏழு வண்ணங்களும் ஒரு வரிசையில் அதாவது முதலில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு

Updated On : 9 மே, 2020 at 6:46 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:07 PM

கேள்வி: வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், இந்த ஏழு வண்ணங்களும் ஒரு வரிசையில் அதாவது முதலில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்று அமைந்திருப்பதற்குக் காரணம் என்ன? இதில் ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்: இதில் மாற்றம் ஏதும் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. சூரியனின் ஒளிக் கதிர்கள் மழைத்துளிகளின் மீது பட்டுப் பிரதிபலிப்பதால் இந்த வர்ணஜாலம் நிகழ்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

இந்த வர்ணஜாலத்திற்குப் பெயர்  SPECTRUM. இந்த SPECTRUM ~ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் அமையும். அது என்றும் எப்படியும் மாறாது. இது இயற்கையின் அதிசயம்.  இது ஏன் இந்த வரிசையில் அமைகிறது என்பதைப் பலரும் கண்டுபிடிக்க முயன்று இயற்கைக்கு முன் தோற்றுப் போயிருக்கிறார்கள்.   எப்படி இருந்தாலும் வானவில் அதிசயம்தானே!

Advertisement

கூடுதலாக ஒரு உபரித் தகவல். வானவில்லின் வர்ணங்களின் வரிசையை எளிதில் மனதில் பதிய வைப்பதற்கு VIBGYOR என்று ஒரு சொல்லை உருவாக்கினார்கள். இதன்படி ஊதாவில் ஆரம்பித்து சிவப்பில் முடியும். ஆனால் வானவில் முதலில் சிவப்பில் ஆரம்பித்து ஊதாவில்தான் முடிகிறது. இதை ஞாபகம் வைத்துக் கொள்ள  தஞவஎஆஐய என்ற சொல்லை பயன்படுத்தவதுதான் சரி என்கிறார்கள். 

அடுத்த முறை வானவில்லைப் பார்க்க நேரிடும்போது நன்றாகக் கவனியுங்கள். மேலே சிவப்பு, அதாவது முதலில் சிவப்பு நிறம் என்று ஆரம்பித்து இறுதியில் ஊதா என்று முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.