பெரியாரைத் துணைக் கோடல்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர்.
பொருட்பால் - அதிகாரம் 45 - பாடல் 7
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
- திருக்குறள்
மனம் போன போக்கிலே விட்டிடாமல்
கடிந்து புத்தி சொல்வோரைத்
துணையாய்க் கொண்டு வாழ்வோர்க்குத்
துன்பம் ஏதும் இல்லையே
புத்தி சொல்லித் திருத்திட
ஆளிருந்தால் கேடில்லை
அவரைக் கெடுக்கும் ஆற்றலுள்ளோர்
யாரும் உலகில் இல்லையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்