இறைமாட்சி!
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான் கண்டனைத்து இவ்வுலகு.
அறத்துப்பால் - அதிகாரம் 39 - பாடல் 7
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான் கண்டனைத்து இவ்வுலகு.
- திருக்குறள்
இனிய சொற்களைப் பேசியே
தேவைக்கு உதவி செய்திடும்
அரசன் சொல்லுக்கு உலகமே
அன்பு செலுத்திப் பணிந்திடும்
நல்ல சொற்கள் நற்செயலால்
உலகைத் தன் வயப்படுத்தலாம்
தனது எண்ணம் போலவே
எல்லாம் நன்றாய் அமைந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்