கேள்வி
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.
அறத்துப்பால் - அதிகாரம் 42 - பாடல் 7
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.
- திருக்குறள்
கேட்டுக்கேட்டு அறிவினை
நன்றாய் வளர்த்துக் கொண்டவர்
பிழையாய் ஒன்றை உணர்ந்தாலும்
குறையாய்ப் பேச மாட்டாரே
ஆர்வம் கொண்டு அறிவினைக்
கூர்ந்து கூர்ந்து கேட்டவர்
அரைகுறையாய் இருந்தாலும்
பேதைமை பேச மாட்டார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்