வான் சிறப்பு
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
அறத்துப்பால் - அதிகாரம் 2 - பாடல் 8
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
- திருக்குறள்
மேகமின்றி வான்மண்டலம்
குளிராமலே இருந்துவிட்டால்
வழிபாடுகள் பூஜையெல்லாம்
பூமியிலே நடப்பதில்லை
Advertisement
செழிப்பாக இருந்தால்தான்
கொண்டாடும் எண்ணம் வரும்
வறுமை வந்து சூழ்ந்து விட்டால்
தெய்வங்களை மறந்திடுவர்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்