சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் உங்களுக்கு அறிவு புகட்டும் ஒருவரின் பெயர் கிடைக்கும். மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள். சொல்லைக் கண்டுகொள்ளுங்கள்...
1. பரந்து விரிந்து நிழல் தரும் மரம்...
2. மலையின் தலைப் பகுதி...
3. எங்கும் எப்போதும் இறைவன் நமக்குத் தருவது...
4. வரம் வாங்கி வந்த மாய ஊர்...
5. கோடைக் காலத்தில் இந்தப் பழத்துக்கு கிராக்கி அதிகம்...
விடை:
Advertisement
கட்டங்களில் வரும் சொற்கள்
1. ஆலமரம்,
2. மலைஉச்சி,
3. தரிசனம்,
4. மாயவரம்,
5. தர்பூசணி.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : ஆசிரியர்