சிறுவர்மணி

தேர்!

ஊரில் வாழும் மக்களை ஒன்று சேர்க்கும் திருவிழா!தேரை இழுக்கும் நாளிலே 

சி.விநாயகமூர்த்தி

ஊரில் வாழும் மக்களை 
ஒன்று சேர்க்கும் திருவிழா!
தேரை இழுக்கும் நாளிலே 
ஊரை இழுக்கும் திருவிழா!

உச்சி  மீது கலசமும் 
உட்புறத்தில் தெய்வமும் 
தச்சன் செய்த சிற்பமும் 
தாங்கி நிற்கும் கோயில் தேர்!

வடங்கள் உண்டு நீளமாய்!
மக்கள் கூடி இழுக்கையில் 
தடங்கல் இன்றி அன்னம் போல் 
தடங்கள் மீது நகருது!

உருளும் பெரிய தேரினை 
உருட்டும் ஆணி சிறியது!
சிறிய தென்று எதனையும் 
கேலி செய்தல் தவறுதான்!

அகன்ற வீதி நான்கினை 
ஆண்டில் ஒரு நாள் மட்டும் 
நகர்ந்து சுற்றி முடித்தபின் 
நிலையம் வந்து சேருது!

கன்றுக்காக மகனின் மேல் 
சோழன் தேரை ஓட்டினான்!
அன்று பாரி முல்லைக்கு 
அழகுத் தேரை வழங்கினான் !

வேணுகானக் கண்ணனும் 
விஜயன் தேரை ஓட்டினான்!
ஞான மொழியைக் கீதையாய் 
தேரில் நின்று ஓதினான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT