பண்புடைமை
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்மக்கட் பண்பு இல்லாதவர்.
பொருட்பால் - அதிகாரம் 100 - பாடல் 7
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்.
- திருக்குறள்
இரும்பை அறுக்க அரத்தினை
பயன்படுத்தவர் தொழிலிலே
கூர்மையாய் அரம் இருப்பதால்
இரும்பை அறுக்கப் பயன்படும்
Advertisement
அரம் போல் அறிவுக் கூர்மையாய்
இருந்தாலும் மனிதப் பண்புகள்
இல்லாதவர் மரம்போலக்
கருதப்படுவர் வாழ்க்கையில்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்