பழைமை
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.
சிறுவர்மணிபழைமை
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.
பொருட்பால் - அதிகாரம் 81 - பாடல் 7
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
- திருக்குறள்
அன்பை நெஞ்சில் தாங்கியே
நட்பு கொண்டு வாழ்பவர்
அழிவு தரும் செயலை நண்பர்
அத்து மீறிச் செய்தாலும்
அன்பை அறுத்துக் கொள்ளாமல்
நட்பாகவே பழகுவார்
ஆழமான அன்பினை
அதன் மூலம் அறியலாம்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்