நல்லோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளுங்கள்.
- வள்ளலார்
தினமும் கடவுளை வணங்குபவனுக்கு அருள் உணர்வு ஏற்படும்.
- வள்ளலார்
வணக்கமும், பணிவும், ஆணவத்தையும், கர்வத்தையும் போக்கும்.
- மாதா அமிர்தானந்தமயி
சோம்பேறித்தனம் என்பது இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்!. அது ஓடினாலும் பயனில்லை..... நின்றாலும் பயனில்லை!
- கூப்பர்
அறமும், அன்பும் உள்ள வாழ்க்கையில் நிம்மதி நிச்சயம் கிடைக்கும்.
- காஞ்சிப் பெரியவர்
கடமை புனிதமானது! அதை பக்தியுடன் செய்வதே தெய்வ வழிபாடாகும்.
- விவேகானந்தர்
நல்லோரைத் தேர்ந்தெடுத்து நன்கு பழகுங்கள்! முன்னேற்றம் தானே வரும்.
- கிருபானந்த வாரியார்
பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.
- புத்தர்
சுய மனக்கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்பவர்களே உண்மையில் சுதந்திரமானவர்கள்.
- மகாத்மா காந்தி
பரிகாசப் பேச்சைப் பேசுபவன், பகைவனைத் தேடிக் கொள்கிறான்.
-ஜான்கே