முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

பணிவும், எளிமையும் இருந்தால் தெய்வம் தேடி வரும். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

பணிவும், எளிமையும் இருந்தால் தெய்வம் தேடி வரும். 
- பைபிள்

நல்லோர் மனம் நடுங்கும்படியான செயல்களைச் செய்தல் கொடிய பாவம். 
- வள்ளலார்

தினமும் கடவுளை வணங்குபவனுக்கு அருள் உணர்வு நிச்சயம். 
- வள்ளலார்

தன்னைச் சரிப்படுத்திக்கொள்பவனே,  உலகைச் சரிப்படுத்தத் தகுதியானவன். 
- சாய்பாபா

உறவாடும் உதடுகளைவிட, உதவும் கரங்கள் புனிதமானவை. 
- அன்னை தெரசா

திறமையாகப் பேசுவதைவிட, இங்கிதமாகப் பேசுவது சிறந்தது. 
- பேகன்

ஆசைக்காகப் பொருள் தேடுவதைவிட , பொருளுக்கேற்ப ஆசைகளைக் குறைத்துக் கொள்வது மிக நல்லது. 
- அரிஸ்டாட்டில்

இயற்கையைப் போற்றுதல் கடவுளை வழிபடுவதற்குச் சமம். 
- ரவீந்திரநாத் தாகூர்

கர்வத்தின்  பிடி இறுகினால், அறத்தின் பிடி  நழுவுகிறது! 
- பாரதியார்

அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனம். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம். 
- டாக்டர் ராதாகிருஷ்ணன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.