அங்கிள் ஆன்டெனா
பெரும்பாலானவர்கள் நீலநிற மையைப் பயன்படுத்தித்தான் எழுதுகின்றனர். அந்த நிறமையினால் கையொப்பமும் இடுகிறார்கள்.
கேள்வி: பெரும்பாலானவர்கள் நீலநிற மையைப் பயன்படுத்தித்தான் எழுதுகின்றனர். அந்த நிறமையினால் கையொப்பமும் இடுகிறார்கள். ஆனால், சில உயர் அதிகாரிகள் மட்டும் பச்சை நிறமையினால் கையெழுத்திடுகிறார்கள். இது எதற்காக?
பதில்: எல்லோரும் பச்சை நிற மையினால் எழுதலாம் அல்லது கையெழுத்திடலாம். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது.
பச்சை நிற மையினால் கையெழுத்திடுவதன் நோக்கம் குறிப்பிட்ட சான்றிதழ் போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்ததான். ஆகவே அரசு உயர் அதிகாரிகள் இந்நிற மையினால் கையெழுத்திடுகிறார்கள்.
Advertisement
இந்த நிற மையினால் கையெழுத்திடப்பட்ட ஒரு பத்திரம் அல்லது கோப்பு 100 சதவீதம் உறுதியானது என்பதைக் குறிக்கின்றது.