முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவனே அறிவாளியாகிறான். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவனே அறிவாளியாகிறான். 
- ஜான்சன்
செல்வத்தில் செருக்கு வேண்டாம். வறுமையில் சோர்வும் வேண்டாம். 
- கிளியோபுலஸ்
நம்பிக்கை வாழ வைக்கும். அச்சமோ கொன்று கொண்டிருக்கும். 
- ஃபின்னிஷ்
வேலையில் ஈடுபடுவாய்! அது ஒரு இனிமையான 
அனுபவம்! 
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவுக் கல்வி மட்டுமின்றி, மாணவ, மாணவிகளுக்கு ஞானக்கல்வியையும் புகட்ட வேண்டும். 
- வள்ளலார்
முயற்சியைக் கைவிடாத
வனிடம் சக்தி தங்கிக்
கொண்டிருக்கிறது 
- எமர்சன்
துன்பப்படுபவர்களுக்கு உதவுபவன் இறைவனுக்கு கடன் தருகிறான். 
- இயேசுபிரான்.
எதிர்கால மகிழ்ச்சிக்கு 
கல்வியே ஆதாரம் 
- தாமஸ் புல்லர்.
பேசிக்கொண்டிருக்காமல் வேலையை ஆரம்பித்தலே அதை முடிப்பதற்கு வழி. 
- வால்ட் டிஸ்னி
நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப்பார்த்தால் மகிழ்ச்சி அடையலாம். நமக்குக் கிடைக்காததை எண்ணிப் பார்த்தால் அதிருப்தியாகத்தான் இருக்கும். 
- ஓபரா வின்ஃபிரே 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.