கடவுள் வடிவில் வள்ளல்
வள்ளல் என்ற பெருமை
வருவ தில்லை எல்லோர்க்கும்
அள்ளிக் கொடுத்த அழகர்
அவர்போல ஒருவ ரில்லை
செல்வம் தேடிக் குவித்தார் - அதை
எல்லோருக்கும் கொடுத்தார்
கல்வி என்னும் கண் திறக்கக்
கோயில் ஒன்று எடுத்தார் (வள்ளல்)
சாதி பேதம் ஒழித்தார் - மதச்
சண்டைகளை மறுத்தார்
நீதியொன்றே எவர்க்கும் என்ற
நிலையை அவரும் வகுத்தார் (வள்ளல்)
சங்க மன்னர் போல - தனி
அரசு ஒன்றை அமைத்தார்
எங்கும் வறுமை தீர்க்கச்
சமத்துவத்தைச் சமைத்தார் (வள்ளல்)
பெண்கள் கல்வி பெறவே - அவர்
பெரிய கனவு கண்டார்
கண்கள் போல அவரைக்
காக்க வேண்டும் என்றார் (வள்ளல்)
கடவுள் என்று சொல்வார் - கண்ணில்
கண்டதில்லை நாமும்
கடவுள் வடிவில் வள்ளல்
போற்றித் தொழுவோம் நாளும்!